
பேழை பெட்டி ....!
இது பொருட்களை பேணி பாதுகாக்க பயன்படுத்தப்படுவதால் பேழை எனப்படுகிறது இதனை தமது இனப் பண்பை கலாசாரத்தை குடும்ப உறவுகள் கட்டுமானத்தை பேணி பாதுகாக்க நகரத்தார் இனம் பயன் படுத்துகிற விதம் மிக அழகானது
இது பொருட்களை பேணி பாதுகாக்க பயன்படுத்தப்படுவதால் பேழை எனப்படுகிறது இதனை தமது இனப் பண்பை கலாசாரத்தை குடும்ப உறவுகள் கட்டுமானத்தை பேணி பாதுகாக்க நகரத்தார் இனம் பயன் படுத்துகிற விதம் மிக அழகானது
ஒரு வளவுக்குள் இருக்கும் ஐயாக்கள் வீட்டினர் தம் முன்னோர்களின் நினைவான பொருட்களை இதனுள் வைத்து பாதுகாப்பார் ஆண்டுக்கு ஒருமுறை கூடி முன்னோர்கள் நினைவாக புதிய துணிமணிகள் எடுத்து உணவு வகைகள் பல செய்து பேழைப் பொருட்களை வெளியிலெடுத்து அதனுடன் வைத்து படைத்து வணங்குவர்
வணங்கியபின் புதிதாக எடுத்த துணிமணிகள் ஏற்கனவே உள்ள நினவுப்பொருட்கள் ஆகியவற்றை பேழையில் வைத்து கட்டி சுவாமி வீட்டினுள் வைத்துவிடுவர் இது மீண்டும் அனைவரும் ஒன்றுகூடிதான் பிரிக்க வேண்டும் என்பது மரபு
இத்தகைய படைப்பு பேழைகள் வளவு ,ஊர் ,சில ஊர்கள் சேர்ந்து என இருக்கின்றன குலத்தில் தோன்றிய கன்னி பெண்கள் வாழ்வரசிகள் பேர்பெற்றமூத்தோர் குலதெய்வங்களுக்கும் பொதுவில் படைப்பு பேழைகள் இருக்கின்றன
எத்தகைய பிணக்குகள் உறவுகளுக்குள் இருந்தாலும் ஒன்று கூடியே பிரிக்க வேண்டும் என்பது மரபாக இருப்பதால் படைக்க விரும்புவோர் பிணக்கு மறந்து கூடி படைப்பர் அச்சமயத்தில் பிணக்கு மாறி இணக்கம் எற்பட வாய்ப்பு பிறக்கிறது குடும்பங்கள் ஒன்று சேர்கிறது
இப்பொழுது வளவு பேழைகள் பேணப்படாமல் பெரும்பாலும் ஆற்றில் விடப்பட்டுவிட்டது ஆற்றில் விட்டது பேழை மட்டுமல்ல வளவு ஒற்றுமைக்குறிய வாய்ப்பையும்தான் ஊர்,பலஊர் படைப்பு பேழைகள் மட்டும் பேணப்படுகின்றன
உறைவை கட்டிவைத்த வளவு பேழைகளும் மீண்டும் கட்டப்படட்டும் வளவுகளும் இடிபடாமல் புதிப்பிகப்படட்டும் மரபு முன்னோர் அருளால் காக்கப்படும்
No comments:
Post a Comment