Thursday, December 11, 2014

இசை பிடிமானம்



 இசை பிடிமானம். இசைவு என்பது மனமொத்த ஒப்புதல் என்பதாகும். இது கால வழக்கில் இசைகுடிமானம் என்றாகியது. நிற்க. இசை பிடிமானம் என்ற திருமண ஒப்பந்த நறுக்கோலையில் ஒன்று அல்லது இரண்டு சொற்கள் இருக்கலாம். அது காலத்தால் வந்தது. ஆனால் அதில் தன வைசியர் என்று கேடுறும் அளவிற்குப் போகவில்லை. அதில் குறிப்பிடப்படும் குலசேகரன்பட்டினம் என்பது இப்போதைய தரங்கம்பாடி என்ற சங்க கால துறைமுகமே. சோழ மண்டலத்தின் கரையோரங்களில் காரைக்கால்/ திருக்கடவூர் அல்லது ஆதி கடவூர்/ நாகை முதலான வாழ்விடங்களைக்கொண்ட புகார் நகரத்து பேரு வணிகர் குழுவினர் தமிழ் வணிகர்கள்தான். நகார்த்தார் என்ற சொல்லும் தமிழ்தான். தமிழ் லெக்சிக்கன் சொல்வது போல நகரம் என்ற சொல் வட மொழியல்ல. நாடோடிகளாய் வாழ்ந்த மக்கள் ஒன்று கூடி ஊர்ந்து இடம் கொண்டதனால் ஊர் எனப்பட்டது. ஊர் என்பது நாடு என்ற பொருளும் கொண்டது. நாடு என்பது மக்கள் ஒன்றாய் வாழ நாடி வருதலேயாகும். பின்னர் வளப்படுத்தி மண்ணை ஆற்றுப்படுத்தும் ஆறுகள் ஓடும் இரு புறத்தின் கரைகளைக் கண்டு நகர்ந்தவர்கள் நகரத்தை அமைத்துக்கொண்டனர். இது முழுக்க தமிழ் வேர்ச்சொல்லில் இருந்து வந்த சொல்லே. லெக்சிக்கன்கள் தமிழை கொத்துக்கறி போட்டு மாற்றானுக்குப் பட்டா போடுவதை நாம் தவிர்க்க வேண்டும். இல்லை என்றால் நம் அடையாளம் களவாடப்படும்.ஆதலினால் நகரத்தார் என்ற சொல் தமிழ் தான், சங்கு என்ற சொல்லும் தமிழ் தான், முகம் என்ற சொல்லும் தமிழ்தான்.

No comments:

Post a Comment