Wednesday, December 17, 2014

செட்டிநாட்டு ஊர்கள்



செட்டிநாட்டு ஊர்கள் எழுபத்தைந்தை
பற்றிய வெண்பா.
கோட்டையிலே மூன்று குடிகளிலே ஆறாகும்
பாட்டைவளர் பட்டிஇரு பத்தாகும்-நாட்டமிகும்
ஊர் பத்தாம் ஏரி, குளம், ஊருணி ஒவ்வொன்றாம்
சேர் வயல்கள் ஐந்தென்று செப்பு.
மங்கலம் மூன்று,வரம் ஒன்றே ஆறுபுரம்,
திங்கள் வகை ஒவ்வொன்று சீர் புரிகள் நான்கு,
பிற ஊர்கள் பத்து சிலை குறிச்சி ஒன்றோ(டு)
அறம் வளர்ப்பார் ஊர் எழுபத்தைந்து.
மேலே குறிப்பிட்டுள்ள ஊர்கள் எழுபத்தைந்தின் பெயர்கள்:
கோட்டையிலே மூன்று::
1.தேவகோட்டை, 2.அலவாகோட்டை,
3.நாட்டரசங்கோட்டை.
குடிகளிலே ஆறு:
1.அரியக்குடி,2.ஆத்தங்குடி,3.பலவான்குடி,4.காரைக்குடி,
5.பனங்குடி,6.கீழப்பூங்குடி
பட்டி இருபத்து:
1.சிறுகூடல்பட்டி, 2.மகிபாலன்பட்டி,3.கண்டவராயன்பட்டி, 4.மிதிலைப்பட்டி,5.ஆவினிப்பட்டி6.குருவிக்கொண்டான்
பட்டி,7.கீழச்சிவல்ப்பட்டி,8.வேந்தன்பட்டி,9.வலையபட்டி,
10.புதுப்பட்டி,11.கொப்பனாபட்டி,12..நற்சாந்துபட்டி,
13.பனையப்பட்டி,14.வேகுப்பட்டி,15.மதகுபட்டி,16.கடியாபட்டி,
17.நேமத்தான்பட்டி,18.கல்லுப்பட்டி,19.தேனிப்பட்டி,
20.உலகம்பட்டி.
ஊர் பத்து:
1.கோட்டையூர், 2.பள்ளத்தூர், 3.கண்டனூர், 4.செவ்வூர்,
5.ஒக்கூர்,6.தெக்கூர்,7.உறையூர்,8.வெற்றியூர்,9.செம்பனூர்,
10.அமராவதிபுதூர்.
ஏரி,குளம்,ஊருணி ஒவ்வொன்று:
1.பாகனேரி, 2.கருங்குளம், 3.தாணிச்சாஊருணி
வயல்கள் ஐந்து:
1.புதுவயல்,2.சிராவயல்,3.ஆராவயல்,4.எ.சிறுவயல்,5.
ஒ.சிறுவயல்.
மங்கலம் மூன்று:
1.பட்டமங்கலம்,2.கொத்தமங்கலம்,3.காளையார்மங்கலம்.
வரம் ஒன்றே:
1.ராயவரம்.
ஆறு புரம்:
1.நாச்சியாபுரம்,2.நடராஜபுரம்,3.கே.லக்ஷ்மிபுரம்,
4.வி.லக்ஷ்மிபுரம்,5.ராமச்சந்திரபுரம்,6.சொக்கனாதபுரம்.
திங்கள் வகை ஒவ்வொன்று:
1.குழிபிறை,2.விராமதி,
சீர் புரிகள் நான்கு:
1.மேலைச்சிவபுரி,2.கோட்டையூர்அளகாபுரி, 3.கே.அளகாபுரி,
4.பி.அளகாபுரி.
பிற ஊர்கள் பத்து:
1.செட்டிநாடு,2.கானாடுகாத்தான்,3.கண்டரமாணிக்கம்,
4.கல்லல்,5.கோனாபட்டு,6.மானகிரி,7.நெற்குப்பை,
8.ராங்கியம்,9.அரிமளம்,10.சக்கந்தி.
சிலை,குறிச்சி ஒன்றோடு:
1.விரயாச்சிலை,2.பூலாங்குறிச்சி.
Courtesy: @somle nms

Tuesday, December 16, 2014

சிவலிங்கம் பற்றி ரஷ்ய விஞ்ஞானியின் ஆராய்ச்சியில் கிடைத்த முடிவு



சிவலிங்கம் பற்றி ரஷ்ய விஞ்ஞானியின் ஆராய்ச்சியில் கிடைத்த முடிவு.

{ஒரு ரெண்டு நிமிஷம் நேரத்தை ஒதுக்கி ரஷ்ய விஞ்ஞானி சொல்வதை படித்து பாருங்கள். ஒவ்வொரு இந்துவும் படித்து பகிர வேண்டிய அறிய விசயம்}

சிவலிங்கங்களைப் பற்றிய டாக்டர் “விளாதி மீரின்” என்பவரின் ஆராய்ச்சி மிக வித்தியாசமானது. அது இந்த பூமியில் மொத்தம் எத்தனை லிங்கங்கள் உள்ளன என்று எண்ணிப் பார்க்கவோ, இல்லை அவற்றின் பூர்வ புராணக் கதைகளை அறியவோமுயலவில்லை. இவற்றுக்கப்பால் சிவலிங்கங்கள் பற்றி நாம் யோசிக்கவும் அதை நாம் நேசிக்கவும் நிறைய அடிப்படைகள் இருப்பதாக டாக்டர் விளாதிமீர் கருதினார்.

அதில் முதலாவது, ஸ்தூல வடிவங்களில் இறை உருவங்களை உருவாக்கி வழிபாடு செய்யும் இந்து மதத்தில் ஒரு குழவிக் கல்லைப் போன்ற, லிங்கம் என்னும் உருவமற்ற ஒரு உருவம் எப்படி உட்புகுந்தது என்பதுதான். உண்மையில் லிங்க சொரூபமானது மூன்று மதத்திற்கும், புத்த ஜைனர்களுக்கும் கூட பொதுவானது என்பதையும் அவர் கண்டுபிடித்தார்.
ஒரு மலை உச்சி! அதில் பௌர்ணமி இரவில் கரிய நிழல் உருவாய் கண்ணுக்குத் தெரிந்த லிங்க உருவத்தை ஒரு கிருத்தவன் சிலுவைச் சின்னமாகப் பார்த்தான். ஒரு இஸ்லாமியன் தங்களின் மசூதிக் கூரை தெரிவதாக கருதினார். புத்த ஜைன சன்யாசிகள் தங்கள் குருமகாங்கள் அமர்ந்து தவம் செய்து கொண்டிருப்பதாகக் கருதினார்கள். ஒரு இந்துவோ அது சிவலிங்கம் என்று திடமாக கருதி இருந்த இட்த்தில் இருந்தே வில்வ இலைகளை வாரி வாரி அர்ச்சித்தான். உருவம் ஒன்று. ஆனால் அனைத்து மார்க்க தரிசிகளையும் அது திருப்திப்படுத்தியது என்றால் சிவம்தான் முதலும் முடிவுமான அனைவருக்கும் பொதுவான இறை ஸ்வரூபமா? டாக்டர் விளாதிமீர் இப்படிதான் கேட்கிறார். மேலும் அவர் புராணங்களிலும், இதிகாசங்களிலும் சிவம் பற்றி சொன்னதை அவர் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. லிங்க உருவம் பற்றி யாரும் சரியாக உணரவில்லை என்பதுதான் அவரது கருத்து.

ஒரு ரஷ்ய நாட்டுப் பிரஜையாக இருந்தாலும் சிவலிங்க சொரூபம் அவருக்குள் ஆழமான பாதிப்புகளை உருவாக்கியதாக அவர் கூறுகிறார். லிங்கம், சதுரம், செவ்வகம், வட்டம், முக்கோணம் என்று கணித வடிவங்கள் அவ்வளவையும் தனக்குள் கொண்டிருப்பதாகவும், ஒவ்வொரு கோணத்தில் இருந்து பார்க்கும்போதும் ஒருள் பொருள் தருவதாகவும் இருக்கிறது என்பது அவர் கருத்து. குறிப்பாக அணு தத்துவம் சிவலிங்க சொரூபத்துக்குள் விலாவரியாக இருக்கிறது. லிங்கத்தைப் பயன்படுத்தத் தெரிந்தால், அது மழை தரும், நெருப்புத் தரும், காற்று தரும் கேட்ட எல்லாம் தரும், என்றும் நம்புகிறார். அப்படி என்றால் சிவமாகிய லிங்க ஸ்வரூபம் என்பது மானுடர்கள் பயன்படுத்தத் தெரியாமல் வைத்திருக்கும் மகத்தான ஒரு எந்திரமா? டாக்டர் விளாதிமீரின் சிவஸ்வரூப ஆராய்ச்சியில் ஒரு ஆச்சரியமூட்டும் தகவல் ஒன்றும் அவருக்குக் கிட்டியதாம்.

இந்த மண்ணில் பூமிக்கு மேலாக கண்ணுக்குத் தெரியும் விதத்தில் உள்ள லிங்க ஸ்வரூபங்கள் இல்லாமல் பூமிக்குள் புதைந்து கிடக்கும் ஸ்வரூபங்களும் ஏராளமாம்! அதுவே அவ்வப்போது ஸ்வயம்பு மூர்த்தியாய் வெளிப்படுகிறதாம். ஸ்வயம்பு மூர்த்தங்களின் பின்புலத்தில் பஞ்சபூத சக்திகளின் இயக்கம் ஒரு சீராகவும், ஆச்சரியம் ஊட்டும் விதத்தில் ஒன்றோடொன்று பின்னிப்பினைந்த கூட்டுறவோடும் செயல்படுகிறதாம். சுருக்கமாகச் சொன்னால், அந்த மூர்த்தங்களைப் பஞ்ச பூதங்கள் ஆராதிக்கின்றன என்பதே உண்மை என்கிறார். இப்படிப்பட்ட ஆராதனைக்குறிய இடங்களில் கூர்ந்து கவனித்தபோது பஞ்ச பூதங்களும் சம அளவிலும் அத்துடன் சீரான இயக்கத்துடனும் அவை இருக்கின்றன. மனித சரீரத்திலும் பஞ்ச பூதங்கள் உள்ளன. இவை சுயம்புலிங்க ஸ்தலங்களில் இயற்கையோடு கூடிச் செயல்படுகின்றன என்கிறார். அதாவது சுயம்பு மூர்த்தி உள்ள ஸ்தலங்களில் வாழும் மனிதர்களே அந்த மண்ணுக்கான மழை. காற்று, அக்கினி மண்வளம் ஆகியவைகளைத் தீர்மானிக்கிறார்கள் என்று கூறும் விளாதிமீர், மதுரை போன்ற சுயம்புலிங்க ஸ்தலங்களில் கூடுதலான மழை அல்லது குறைவான மழைக்கு அங்கு வாழும் மக்களின் மனநிலையே காரணமாகிறது என்கிறார். சுயம்பு லிங்கங்கள் உள்ள மண்ணில் வாழும் மக்கள் மனது வைத்தால் அங்கே எதை வேண்டுமானாலும் உருவாக்கிட இயலும் என்றும் கூறுகிறார்!.

இந்த பூமியானது சூரியன் உதிர்ந்த ஒரு சிறிய அக்னித் துளி என்கிறது விஞ்ஞானம். மெல்லக் குளிர்ந்த இதில் அடுக்கடுக்காய் உயிரினங்கள் தோன்ற ஆரம்பித்தன. அந்த உயிரினங்கள் உயிர் வாழத் தேவையான அனைத்தும் கூட அப்போது தோன்றின. இதுதான் பல கோடி ஆண்டுகளைக் கண்டு விட்ட இந்த பூமியின் சுருக்கமான வரலாறு. மாற்றம் என்பதே இந்தப் பூமியில் மாறாத ஒன்றாக என்றும் இருப்பது. அந்த மாற்றங்களால் வந்ததே இந்த மனித சமூகம். இதன் நடுவே மிக மாறுபட்ட கருத்துகளுடன், நமக்கிருக்கும் அறிவாற்றலால் நம்பமுடியவில்லை என்று ஒரு வார்த்தையில் கூறும் விதமாய் இருப்பதே மதப் புராணங்கள்.

இதில் புராணவழி அறியப்பட்ட சிவமானது தனித்து நிற்கிறது. “புராணம், விஞ்ஞானம் இரண்டையும் கடந்து மூன்றாவதாய் ஒன்றும் உள்ளது. அதுதான் நான்! மானுடமே முடிந்தால் என்னைப் புரிந்துகொள் என்பதுபோல் இருக்கிறது அது” என்கிறார் டாக்டர் விளாதிமீர்! இ ந்த பூவுலகில் சிவம் தொடர்பான அடையாளக் குறியீடுகள் பாரத மண்ணில் மட்டுமன்றி ஆப்பிரிக்கா, ஐரோப்பா முதலிய கண்டங்களில் கூட இருக்கிறது என்பது டாக்டர் விளாதிமீரின் கருத்து. அமெரிக்காவில் “ கிராண்ட் கன்யான் “ என்னும் வித்தியாசமான மலைப் பகுதியில் பராசக்தியின் அம்சங்கள் என்று வர்ணிக்கப்படும் “ சிவம், விஷ்ணு, பிரம்மன் “ மூன்றின் அடையாள உருவங்கள் காணப்படுகின்றனவாம். ஆயினும் இந்திய மண்ணில் மட்டும் சிவம் தொடர்பான சிந்தனைகளும் சைவம் என்கிற ஒரு பிரிவும் உருவாக ஆழமான ஒரு காரணம் இருப்பதாக விளாதிமீர் கருதுகிறார்.

உலகின் உயர்ந்த சிகரமான இமயம் பூகோள ரீதியில் பூமியின் மையத்தில் {கிட்டதட்ட} காணப்படுகிறது. அதன்படி பார்த்தால் இந்த உலகே கூட சிவலிங்க சொரூபம் எனலாம். ஒரு வட்டத்தில் இருந்து கூம்பு முளைத்தது போல் உலகமே ஆவுடையராகத் திகழ இமயம் சிவஸ்தம்பமாக எழும்பி நிற்கிறது. அங்கே பஞ்ச பூத ஆராதனையாக குளிர்ந்த காற்றும் உறைந்த பனியே நீராகவும், அதன் முற்றிய குணமே நெருப்பாகவும் இருக்கிறது. ஈர்ப்பு விசைக்கு உட்பட்ட வெளி வேறு எங்கும் காணப்படாத விதத்தில் தூயதாக எல்லாவித கதிர் வீச்சுக்களையும் காணப்படாததாகக் திகழ்கிறது. இங்கே உயிராகிய ஜீவன் மிகச் சுலபமாக சிவத்தை அடைந்து விட {அ} உணர்ந்து விட ஏதுவாகிறது. அதனாலேயே இங்கே ஞானியர் கூட்டம் அதிகம் இருக்கிறது என்பதும் அவரது கருத்து!

இந்த ரஷ்ய விஞ்ஞானி சொன்ன விஷயங்கள் எதுவும் எந்த விஞ்ஞானியும் மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.





மனம்போன போக்கு எல்லாம் போக வேண்டாம்
மாற்றானை உறவு என்று நம்ப வேண்டாம்
தனம் தேடி உண்ணாமல் புதைக்க வேண்டாம்
தருமத்தை ஒருநாளும் கெடுக்க வேண்டாம்
சினம் தேடி அல்லலையும் தேட வேண்டாம்
சினந்து இருந்தார் வாசல் வழிச் சேர வேண்டாம்
வனம் தேடும் குறவருடை வள்ளிபங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே !


Monday, December 15, 2014

"அஷ்ட பைரவர்கள் போற்றி"



"அஷ்ட பைரவர்கள் போற்றி"
******************************************
ஓம் கால பைரவா போற்றி
ஓம் கல்பாந்த பைரவா போற்றி
ஓம் குரோத பைரவா போற்றி
ஓம் கபால பைரவா போற்றி
ஓம் சம்ஹார பைரவா போற்றி
ஓம் உன்மத்த பைரவா போற்றி
ஓம் கண்ட பைரவா போற்றி
ஓம் உக்கிர பைரவா போற்றி

Thursday, December 11, 2014

இசை பிடிமானம்



 இசை பிடிமானம். இசைவு என்பது மனமொத்த ஒப்புதல் என்பதாகும். இது கால வழக்கில் இசைகுடிமானம் என்றாகியது. நிற்க. இசை பிடிமானம் என்ற திருமண ஒப்பந்த நறுக்கோலையில் ஒன்று அல்லது இரண்டு சொற்கள் இருக்கலாம். அது காலத்தால் வந்தது. ஆனால் அதில் தன வைசியர் என்று கேடுறும் அளவிற்குப் போகவில்லை. அதில் குறிப்பிடப்படும் குலசேகரன்பட்டினம் என்பது இப்போதைய தரங்கம்பாடி என்ற சங்க கால துறைமுகமே. சோழ மண்டலத்தின் கரையோரங்களில் காரைக்கால்/ திருக்கடவூர் அல்லது ஆதி கடவூர்/ நாகை முதலான வாழ்விடங்களைக்கொண்ட புகார் நகரத்து பேரு வணிகர் குழுவினர் தமிழ் வணிகர்கள்தான். நகார்த்தார் என்ற சொல்லும் தமிழ்தான். தமிழ் லெக்சிக்கன் சொல்வது போல நகரம் என்ற சொல் வட மொழியல்ல. நாடோடிகளாய் வாழ்ந்த மக்கள் ஒன்று கூடி ஊர்ந்து இடம் கொண்டதனால் ஊர் எனப்பட்டது. ஊர் என்பது நாடு என்ற பொருளும் கொண்டது. நாடு என்பது மக்கள் ஒன்றாய் வாழ நாடி வருதலேயாகும். பின்னர் வளப்படுத்தி மண்ணை ஆற்றுப்படுத்தும் ஆறுகள் ஓடும் இரு புறத்தின் கரைகளைக் கண்டு நகர்ந்தவர்கள் நகரத்தை அமைத்துக்கொண்டனர். இது முழுக்க தமிழ் வேர்ச்சொல்லில் இருந்து வந்த சொல்லே. லெக்சிக்கன்கள் தமிழை கொத்துக்கறி போட்டு மாற்றானுக்குப் பட்டா போடுவதை நாம் தவிர்க்க வேண்டும். இல்லை என்றால் நம் அடையாளம் களவாடப்படும்.ஆதலினால் நகரத்தார் என்ற சொல் தமிழ் தான், சங்கு என்ற சொல்லும் தமிழ் தான், முகம் என்ற சொல்லும் தமிழ்தான்.

Sunday, November 16, 2014

தெரிந்து கொள்வோம்..!!! நகரத்தார்கள் பற்றி






தெரிந்து கொள்வோம்..!!!

ஆனந்த விகடன் டிசம்பர் 2011 ஆம் ஆண்டு நகரத்தார்கள் பற்றி வெளியிட்ட ஒரு தொகுப்பு. - Part 1

அது வருடம் 1850. தமிழகத்தின் கடற்கரை பிரதேசமான ராமநாதபுரத்திலிருந்து ஒன்றிரண்டு கப்பல்கள் புறப்பட்டு, கிழக்கு நோக்கி பயணம் செய்ய ஆரம்பித்தன. மூன்று மாதங்களுக்குத் தேவையான உணவு, தண்ணீர், தொழில் செய்வதற்குத் தேவையான பணம், ஆட்கள் என சீறிவரும் அலைகளை உடைத்து எறிந்தபடி சென்று கொண்டிருந்தன அந்தக் கப்பல்கள்.
இத்தனைக்கும் பிரிட்டிஷ்காரர்களோ, பிரெஞ்சுக் காரர்களோ அந்த காலத்தில் பயன்படுத்தி வந்த நவீன கப்பல் கருவிகள் எதுவும் அவர்களிடம் இல்லை. திசை காட்டும் கருவி இல்லை. ஒரு இடத்திற்கு மிகச் சரியாக எப்படி போய் சேருவது என்கிற வரைபடம் இல்லை. இதற்கு முன்பு இலங்கைக்குச் சென்று வந்ததுதான் அந்தக் கப்பலில் இருந்தவர்களின் உச்ச பட்ச கடல் பயண அனுபவம்.
ஆனாலும், அவர்களிடம் நிறைய நம்பிக்கை இருந்தது. திட்டமிட்டபடி புதிய பிரதேசத்திற்குப் பத்திரமாக போய்ச் சேர முடியும். அங்கு நிறைய பணம் சேர்க்க முடியும் என்கிற உறுதி அவர்களிடம் நிறையவே இருந்தது. இந்த கனவை நனவாக்குவதற்குரிய உழைப்பும் அறிவும் அவர்களிடம் அள்ள அள்ளக் குறையாமல் இருந்தது.
இந்த நம்பிக்கையும், உறுதியும், உழைப்பும்தான் காரைக்குடியில் இருந்த நாட்டுக்கோட்டை செட்டியார்களை ராமநாதபுரம் கடற்பரப்பிலிருந்து பர்மாவை நோக்கி இழுத்துச் சென்று கொண்டிருந்தது.
இந்த கடல் பயணம் செய்வதற்கு முன்னால், பல ஆயிரம் ஆண்டுகளாகவே வணிகம் ஒன்றையே தங்கள் குலத் தொழிலாகச் செய்து வந்தவர்கள் நகரத்தார்கள் என்பது அந்த சமூகத்தின் வரலாற்றைக் கொஞ்சம் விளக்கமாகப் பார்த்தாலே புரியும்.
நாகபுரியைச் சேர்ந்தவர்கள்!
நகரத்தார்களின் பூர்வீகம் நாக நாட்டில் உள்ள சாந்தியாபுரி என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். இந்த நாக நாடு என்று அழைக்கப்பட்ட இடம் இப்போது என்ன பெயரில் அழைப்படுகிறது என்பதற்கான தெளிவான பதில் இல்லை. சிலர், இன்று மத்தியப்பிரதேசத்தில் இருக்கும் போபால் ஒரு காலத்தில் நாகர் தேசம் என அழைக்கப்பட்டதாகவும், இன்னும் சிலர் ஆந்திராவில் நாகர் என்கிற ஒரு பிரதேசம் இருந்ததாகவும் சொல்கின்றனர். இன்னும் சிலர், நாகநாடு என்பது இப்போதுள்ள சுமத்திரா தீவுதான் என்றும் சொல்கின்றனர். எது நாக நாடு என்பதை வரலாற்று ஆய்வாளர்கள் இனிமேல் உறுதிபடுத்த வேண்டும்.
இரண்டாயிரம் ஆண்டு களுக்கு முன்பே, நாக நாட்டு மன்னன் செய்த கொடுமையால் நகரத்தார்கள் அங்கிருந்து புறப்பட்டு, காஞ்சிபுரத்தை வந்தடைந்தனர். பிறப்பிலேயே வைசியர்களாக இருக்கும் நகரத்தார்கள் காஞ்சிபுரத்திற்கு வந்தடைந்த பிறகு அங்கு வியாபாரம் தழைத் தோங்க ஆரம்பித்தது; செல்வம் கொழிக்கத் தொடங்கியது.
ஆனால், பிற்பாடு வந்த பிரதாபன் என்கிற மன்னன் நகரத்தார்களை கொடுமைப்படுத்துகிற மாதிரி பல சட்டதிட்டங்களை கொண்டுவர, மேற்கொண்டு தொழில் செய்ய முடியாதபடிக்கு துவண்டு போனார்கள்.
அந்த காலகட்டத்தில் காஞ்சிபுரம், சோழ மண்டலத்தின் ஒரு பகுதியாக இருந்ததால், காஞ்சிபுரத்தில் இருந்த நகரத்தார்கள் காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்த வணிகர்களுடன் நெருக்கமான வணிகத் தொடர்பு வைத்திருந்தனர். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த நகரத்தார்கள் மூலம் காவிரிப்பூம் பட்டினத்திற்கு எப்படி எல்லாம் வருமானம் சேருகிறது என்பது மன்னன் மனுநீதிச் சோழனுக்கே தெரிந்திருந்தது.
வியாபாரத்தில் சிறந்து விளங்கும் நகரத்தார் சமூகத்தினரை காவிரிப்பூம் பட்டினத்திலேயே ஏன் வைத்துக் கொள்ளக்கூடாது என்று நினைத்தான் மனுநீதிச் சோழன்.
எனவே, நகரத்தார் சமூகத்து மக்களை காவிரிப்பூம் பட்டினத்திற்கு வந்து இருக்கும்படி அழைப்பு விடுத்தான். இதனைத் தொடர்ந்து பெருமளவிலான நகரத்தார்கள் முதன் முதலாக காவிரிப்பூம் பட்டினத்திற்கு வந்து வாழ ஆரம்பித்தனர்.
சோழ மண்டலத்திற்கு வந்த சில காலத்திலேயே, நகரத்தார்களின் தொழில் திறமையை மதுரையை ஆண்டுவந்த பாண்டிய மன்னனும் அறிந்து கொண்டான். இப்படிப்பட்ட வணிகர்கள் நம் நாட்டில் இல்லையே என்கிற ஏக்கம் பாண்டிய மன்னனிடம் பிறந்தது. ஒரு நாட்டில் இல்லாத ஒன்று பக்கத்து நாட்டில் இருந்தால் அதை கேட்டுப் பெறுகிற நடைமுறை அப்போதே சோழ நாட்டுக்கும், பாண்டிய நாட்டுக்கும் இருந்தது.
பாண்டிய மன்னன் சோழ மன்னனிடமிருந்து பலவற்றை ஆட்களை அனுப்பி கேட்டு வாங்கினான். ஆனால், தொழில் திறமை கொண்ட நகரத்தார் சமூகத்தினரில் சிலரையாவது தங்கள் நாட்டுக்குத் தரவேண்டும் என்பதைக் கேட்க, சவுந்தர பாண்டியன் என்கிற மன்னனே சோழ மன்னனான மனுநீதி சோழனை நேரில் சந்தித்துக் கேட்டான். அரசனே நேரில் வந்து கேட்கும் போது இல்லை என்று சொல்ல முடியுமா?
மன்னன் மனுநீதிச் சோழன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்த நகரத்தாரில் ஒரு பகுதியினர் மதுரை நோக்கி புறப்பட்டனர்.
இந்த சமயத்தில் பூவந்தி சோழன் என்கிற மன்னன் நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண் மீது மையல் கொள்ள, அதற்கு ஒட்டுமொத்த நகரத்தார் சமூகமே எதிர்ப்பு தெரிவிக்க, நிம்மதி இழந்து தவித்தனர். எனவே, காவிரிப்பூம்பட்டினத்தி லிருந்து கிளம்பி, மதுரை நோக்கி குடிபெயர ஆரம்பித்தனர்.
ஆனால், இம்முறை அவர்கள் பாண்டிய மன்னனின் தலைநகரான மதுரையில் வசிக்க விரும்பவில்லை. மன்னனுக்கு மிக நெருக்கமாக இருந்தால் பல வகையிலும் பிரச்னைக்குள்ளாக வேண்டி இருக்கிறது. எனவே, கொஞ்சம் தள்ளியே இருப்போம் என்று மதுரையிலிருந்து சுமார் 80 கி.மீ. தொலைவில் இருக்கும் ஓங்காரக் குடியை தேர்வு செய்தனர். இந்த ஓங்காரக்குடிதான் காரக்குடி என்று மருவி, தற்போது காரைக்குடியாக இருக்கிறது.
'(ராமநாதபுரம்) கடலுக்கு மேற்கே, வைகைக்கு வடக்கே, பிரான்மலைக்குக் கிழக்கே, வெள்ளாற்றுக்கு தெற்கே’ அமைந்த இன்றைய சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்கள்தான் நகரத்தாரின் பூர்வீக பூமியாக அழைக்கப்படும் செட்டி நாடு. இந்த நாட்டில் பிறந்த எந்த நகரத்தாரும் யாரிடமும் கூலி வேலை செய்வதில்லை. இவர்களுக்குத் தெரிந்ததெல்லாமே வியாபாரம் மட்டுமே. முத்து, பவளம், வைரம் போன்ற விலை உயர்ந்த ரத்தினக் கற்களை விற்பதில் ஆரம்பித்து, இவர்கள் செய்யாத தொழில்களே இல்லை.
தொழில் வளர்ச்சி காரணமாக ஒரு காலகட்டத்தில் இவர்களிடம் நிறைய பணம் சேர, பணத்தைக் கடனாக கொடுத்து வட்டிக்கு விடும் தொழிலையும் செய்தனர். 1930-ம் ஆண்டு வாக்கில் எடுத்த புள்ளி விவரங்களின்படி பர்மா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை ஆகிய நாடுகளில் வட்டித் தொழில் நடத்தி வந்ததன் மூலம் நகரத்தார்கள் செய்திருந்த முதலீடு சுமார் 200 கோடி ரூபாய்!
நகரத்தார் குலத்தில் பிறந்ததில் பெருமிதம் அடைகிறேன்.

-இவன்
நாம் நகரத்தார்

Saturday, November 1, 2014

நிலத்தடி நீரை சேமிப்போம்





இந்திய நகரங்கள் பலவும் தற்போது நிலத்தடி நீர் பற்றாக்குறையால் தவிக் கின்றன. தண்ணீரைத் தேடி ராட்சத துளையிடும் எந்திரங்கள் மூலம் பல்லாயிரம் அடிக்கு துளையிட்டாலும் காற்றுதான் வருகிறது. பூமியின் அடிப்பகுதியில் இருந்து பல லட்சம் லிட்டர் நீரை நாம் நாள்தோறும் உறிஞ்சுகிறோம். அதில் 75 சதவீதத்தை கழிவு நீராக மாற்றுகிறோம்.
பூமிக்குள் இருந்து எடுக்கும் நீரில் 4ல் 3 பங்கையாவது  மீண்டும் பூமிக்குள் செலுத்த வேண்டும். அப்படி நடந்தால் பூமிக்கடியில் இருந்து எப்போதும் தண் ணீர் கிடைக்கும். அதற்கு 2 வழிகள் உள்ளன. முதலாவது மழை நீரை சேமிப் பது, அடுத்தது நிலத்தடியில் இருந்து எடுத்த நீரை, மீண்டும் அங்கேயே சேர்ப்பது. மழைநீர் சேமிப்பு என்பது பூமியின் அடிப்பகுதியில் உள்ள உவர்ப்பு நீரை யும் நன்னீராக மாற்றும். தண்ணீரில் தாது உப்புக்களின் கூட்டுத் தொகை அதிகபட்சம் 500 மில்லி கிராம் இருக்க வேண்டும். அது அதிகரித்தால் நீர் உவர்ப்பாக மாறும்.
இது தொடர்பான ஆய்வின் முடி வுகள் நமது நாட்டில் பெரும்பாலும் நிலத்தடியில் உவர்ப்பு நீர்தான் உள்ளதாக கூறுகிறது. இதனை மழைநீர் சேமிப்பின் மூலம் சரி செய்யலாம்.
அடுத்ததாக நாம் பயன்படுத்திய நீரை மீண்டும் சுத்திகரித்து நிலத்தடியில் செலுத்துவது, கூழாங்கற்கள், ஆற்று மணல், நிலக்கரி, சரளைக்கற்கள் வழி யாக நாம் பயன்படுத்திய நீரை செலுத் தினால் அது பெருமளவு கத்திகரிக்கப் படும். ஒவ்வொரு வீட்டிலும் அதிக செலவு இல்லாமல் இதனை அமைக் கலாம். வீடுகளின் குளியல் அறையில் இருந்து வெளியேறும் நீரை இதுபோல சுத்திகரித்து நிலத்தடியில் சேர்க்கலாம்.
அத்துடன் மழைநீரை சுத்தமான தொட்டிகளில் சேகரித்து குடிநீராக பயன்படுத்தலாம். நிலத்தடி நீர் பற்றாக் குறை அதிகம் உள்ள பகுதிகளில் மழை நீரை பெரிய கலன்களில் சேமித்து அதில் தேத்தான் கொட்டை என்ற ஒரு தாவர விதையை போட்டு மூடி வைத்து நீண்ட நாட்களுக்கு பயன்படுத்துகிறார் கள். தேத்தான் கொட்டையின் தன்மை யினால் மழைநீர் அதன் தன்மை மாறாமல் இருக்கும்.
குழந்தைகளின் எதிர்காலம் கருதி பணம், பொருட்களை பலரும் சேமிக் கின்றனர். ஆனால் அவர்களுக்கு நீரும் தேவை என்பதை உணர மறுக்கின்றனர். நீரின்றி அமையாது உலகு என்ற வள்ளுவரின் கருத்தின்படி நிலத்தடியில் நீரை சேமிக்கா விட்டால் நமது சந்ததி களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என்பது மறுக்க முடியாத உண்மை.
-  தகவல்: சீ. இலட்சுமிபதி, தாம்பரம், சென்னை-45


கண்ணதாசன் சொன்ன கதை..!




கண்ணதாசன் சொன்ன கதை...
(இன்றைய அரசியல் சூழலுக்கு ஏற்ற கதை)
எமதர்மன் சித்திரகுப்தனிடம் ‘இனிமேல் சாகிறவர்களின் நாக்கை மட்டும் தனியாக அறுத்துக் கொண்டு வந்து விடு’’ என்று சொன்னான்.
அது போல் சுமார் ஆயிரம் நாக்குகளை அவன் அறுத்துக் கொண்டு வந்தான்.
அறுத்த பின்னாலும் சில நாக்குகள் துடித்துக்கொண்டு கிடந்தன. சில நாக்குகள் மரத்துப் போய் இரு கூராகப் பிளந்து கிடந்தன.
‘’மரத்துப் போய் இரட்டையாகக் கிடக்கும் நாக்குகளெல்லாம் யாருடயவை?’’ என்று கேட்டான் எமதர்மன்.
‘இரட்டையாகக் கிடக்கும் நாக்குகளெல்லாம் ஆளும் கடசிக்காரர்களுடைய நாக்குகள் பிரபு! துடித்துக்கொண்டிருக்கும் நாக்குகளெல்லாம் எதிர்க்கட்சிக்காரர்களுடைய நாக்குகள் பிரபு!’ என்றான் சித்திரகுப்தன்.
‘’ஒரு உணர்ச்சியும் இல்லாத மற்ற நாக்குகள்?’’ என்று கேட்டான் எமன்.
‘’அவர்களுக்கு ஓட்டுப போட்டவர்களுடைய நாக்குகள்’ என்று அமைதியாகச் சொன்னான் சித்திரகுப்தன்

Tuesday, October 28, 2014

தொப்பையை குறைக்கும் இயற்கை மருத்துவம்


தொப்பையை குறைக்கும் இயற்கை மருத்துவம் :-
தொப்பையை குறைக்க இயற்கையாக கிடைக்கும் பழங்கள், காய்கரிகள் மற்றும் கீரைகள் கொண்டு சுலபமாக செய்யலாம்.
நெல்லிக்காயை கொட்டை நீக்கி சுத்தம் செய்து, சாறு எடுத்து அதனுடன் சிறிது இஞ்சிச்சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் கொழுப்பு குறையும்.
அருகம்புல் சாரெடுத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர தொப்பை குறையும்.
கேரட்டுடன் தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தேவையற்ற கொழுப்பு குறைந்து உடல் எடை குறையும்.
கரிசலாங்கண்ணி இலையை, பாசி பருப்புடன் சேர்த்து சமைத்து தினமும் சாப்பிட உடல் எடை குறையும்.
சோம்பை சுத்தம் செய்து தண்ணீர் விட்டு காய்ச்சி அடிக்கடி குடித்து வந்தால் உடல் எடை குறையும்.
மேலும் வெள்ளரி, நெல்லி, கோஸ், கொத்தமல்லி, முருங்கை, திராட்சை, ஆரஞ்சு, தக்காளி, பப்பாளி, அன்னாசி, எலுமிச்சை, கொய்யா, புதினா, வெங்காயம், தர்பூசினி, பேரிக்காய், கறிவேப்பிலை, வாழைத்தண்டு இவைகளை சாறு எடுத்து குடிக்க உடல் எடை குறையும்.

செட்டிநாட்டு நகைகள் ஒருதொகுப்பு



செட்டிநாட்டு நகைகள் ஒருதொகுப்பு :
நமது செட்டிநாட்டு பகுதிகளில் நாம் பயன்படுத்து சில நகைகளின் பெயர்களும் அதை பற்றியும் இங்கு நாம் பார்போம் . வைர நகைகளும் தங்க நகைகளும் நமவர்களில் இருபாலரும் அணியகுடியவையே .
முதலில் நம் ஆண்கள் அணியும் நகைகளை பற்றி பார்போம்

அரும்புதடை - மோதிரம்
சங்கிலி
குருமாத்து - கைசங்கிலி
கால்மோதிரம் - ஆண்கள் அணியும் மிஞ்சி ( மெட்டி )
தண்டை - காலில் அணியப்படும் வெள்ளியால் செய்த ஒருவித வளையம்
கௌரி சங்கம் - கௌரி சங்கம் என்பது ஒரு உருத்திராட்ச மாலையாகும். இந்த கௌரிசங்கத்தில் உருத்திராட்சங்களை ஒன்றுடன் ஒன்றாக இணைக்கும் இணைப்புகள், தொங்கட்டான் (பெண்டன்ட்) போன்றவை தங்கத்தில் அமைக்கப்படுகிறது. இந்தத் தொங்கட்டானில் ரிசபாருடர் எனும் ரிசப வாகனத்தில் சிவசக்தி சமேதராக அமர்ந்திருக்கும் வடிவம் பொறிக்கப்பட்டிருக்கும்
நட்சத்திர தோடு - இது சிறு பிள்ளை களுக்கு அணிவிகபடும் நகை ஆகும் . எதில் சில்லர் வைரக் கற்கள் அல்லது வெள்ளை பூகற்கள் பதித்து வைத்திருப்பர் . இது ஆண் / பெண் இரு குழந்தைகளுக்கும் அணியபெரும் நகையாகும்
நமது ஆச்சிகள் பயன்படுத்து / பயன்படுத்திய சில நகைகளின் பெயர்களை அதை பற்றியும் இங்கு பார்போம்.
கழுத்திரு - இது செட்டிநாட்டு அணிகலன்களுள் ஒன்றாகும். நகரத்தார் தாலி என்றும் அழைக்கப்படுகிறது. திருமணம் அல்லது சாந்திக் கல்யாண (சஷ்டியப்த பூர்த்தி) நாளன்று மணமகனால் மணமகளுக்கு அணிவிக்கப்படும் ஒரு வகையான கழுத்து அணிகலன் ஆகும்.
கண்டசரம் - வைரகற்கள் பதிக்கப்பட்ட கழுத்தை ஒட்டி அணிவிக்கப்படும் ஒரு வகையான கழுத்து அணிகலன் .
மங்களச்சரம் - தாலி மற்றும் தாலி சங்கிலி முழுவதும் வைரகற்கள் பதிக்கப்பட்ட ஒரு வகை அணிகலன் .
பூச்சரம் - இது பூ வேலைப்பாடுகலுடன் கூடிய தங்கச்சங்கிலி முழுவதும் வைரகற்கள் பதிக்கப்பட்ட ஒரு வகை அணிகலன் .
முத்து மாலை - இது தங்கச்சங்கிலியில் முழுவதும் உயர்ரக முத்துகலால் கோர்க்கபட்ட மாலை . இது ஒரு வகை கழுத்து அணிகலன் .
பாசிமாலை - இது தங்கச்சங்கிலியில் கருகுமணி என்று அழைக்கப்படும் பாசி மணிகளால் கோர்க்கபட்ட மாலை . இது ஒரு வகை கழுத்து அணிகலன் .
வைரக்காப்பு - இது தங்கத்தால் ஆன வளையலின் வெளிப் பகுதிகளில் வைரக்கற்கள் கொண்டு பதிக்கப்பட்ட ஒரு வகையான கையில் அணியகுடிய அணிகலன் .
நெளிகாப்பு - இது தங்கத்தால் ஆன வளையைல் போன்ற அமைப்பில் நெளி நெளி யாக வளைந்து காணப்படும் . இது சாதாரணமாக வீட்டில் உள்ளபோது அணிந்து கொள்ளப்படும் நகைகளில் ஒன்று .
கல்லுக்காப்பு - இது தங்கத்தால் ஆன வளையைல் போன்ற அமைப்பில் வெளிப்புறத்தில் வண்ணக்கற்கள் பதிகபட்டிருகும் .ஒரு வகையான கையில் அணியகுடிய அணிகலன் . ( நீலகல்லுக்காப்பு , சிவப்புகல்லுக்காப்பு , பச்சைகல்லுக்காப்பு )
முத்துக்காப்பு - இது தங்கத்தால் ஆன வளையைல் போன்ற அமைப்பில் வெளிப்புறத்தில் உயர்ரக முத்து பதிகபட்டிருகும் .
பாசிக்காப்பு - இது தங்கத்தால் ஆன வளையைல் போன்ற அமைப்பில் வெளிப்புறத்தில் கருகுமணி என்று அழைக்கப்படும் பாசி பதிகபட்டிருகும் .
வைரத்தோடு - தங்கத்தால் செய்த தோட்டில் முழுவது வைரக்கற்கள் பதிகபட்டிருகும் . ( இதில் ஏழு கல்லு , பதிமுனு கல்லு பதித்தது என்று கணக்குகள் உள்ளன )
வெள்ளகல்லு தோடு - தங்கத்தால் செய்த தோட்டில் வெள்ளை கற்கள் பதிகபடிருகும் . இது சாதரணமாக வீட்டில் உள்ளபோது அணியப்படும் நகையாகும்
பாசித்தோடு - தங்கத்தால் செய்த தோட்டில் இடையில் கருகுமணி பதிகபட்டிருகும் . இதுவும் சாதரணமாக வீட்டில் உள்ளபோது அணியப்படும் நகையாகும்
முத்துத்தோடு - தங்கத்தால் செய்த தோட்டில் இடையில் உயர்ரக முத்து பதிகபட்டிருகும் .
முத்துமோதிரம் / முத்து அரும்புதடை - தங்கத்தால் ஆன அரும்புதடையில் முத்து பதிக்கபட்டிருகும் .
அரும்புதடை - வைரவேட்டு வரிகள் அல்லது பூ நெளிகள் கொண்டு செய்யபட்டிருக்கும் . இதில் யனை முடி பதிக்க பட்டிருக்கும் . இரண்டு வரி அமைப்புகள் கொண்டிருக்கும் . இது கை விரல்களில் அணியப்படும் ஆபரணம் ஆகும் .
மிஞ்சி - இது வெள்ளியால் செய்த ஆபரணம் ஆகும்
( மெட்டி ). கால் விரல்களில் அணியகுடிய ஒன்று . இதில் ஒரு தனி சிறப்பு என்னவென்றால் நம் ஆச்சிகள் மட்டும் கால் விரல்களில் மூன்று வலயங்கள் அணிதிருபர்கள்
இரட்டவடசங்கிலி - இது இரண்டு சங்கிலிகள் ஒன்றோடு ஒன்று சிறிது இடைவெளி விட்டு பினைகபட்டிருக்கு இதில் தாலியை கோர்த்து அணிவர்
ஒற்றை வட சங்கிலி - இது சாதாரணமான தங்க சங்கில்லியாகும் . எதில் தாலியை கோர்த்து அணிவர்
மாங்கா மாலை - இது தங்கத்தால் செய்யப்பட்ட ஒன்று . இது மங்காய் வடிவில் சிறிதாக இருக்கும் . சங்கிலியின் இடையில் சிறு மாங்காய் வடிவ அமைப்புகள் கொர்கபட்டிருகும்
முற்காலத்தில் நமது ஆச்சிகள் தலையில் குத்தும் கொண்டை உசி , உக்கு , சேலையில் குத்த கூடிய உக்குகள் கூட தங்கத்தில் பயன்படுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
. நமது வழக்கத்தில் கட்டயமாக பெண் பிள்ளைக்கு திருமணத்தின் பொது கட்டாயமாக வைரைத் தோடும் அதற்கு மாற்று தோடும் தருவர் .அதே போன்று மணமகனுக்கு வைர மோதிரமுன் வழங்குவது கட்டயமாக உள்ளது . இதை நகைகளில் கணக்கு எடுத்தது கொள்ளபடமார்கள்
ஒருநகை என்றால் பெண்ணுக்கு கன்டசரம் மட்டு கொடுப்பார்கள்
இரண்டு நகை என்றால் பெண்ணுக்கு கன்டசரமும் வைரக்காப்பும் தருவார்கள் அல்லது பூச்சரமும் கன்டசரமும் தருவார்கள் ( கன்டசரம், பூச்சரம் , வைரக்காப்பு , மங்களச்சரம் இவைகளில் எதேனும் இரண்டு தருவார்கள் )
முன்று நகை என்றால் பெண்ணுக்கு கன்டசரம் ,மங்களச்சரம் வைரக்காப்பும் தருவார்கள் அல்லது (கன்டசரம், பூச்சரம் , வைரக்காப்பு , மங்களச்சரம் இவைகளில் எதேனும் மூன்றை தருவார்கள் )
இந்தியாவில் வைர நகைகள் வாங்கும் வாடிக்கையாளர்களில் 40% செட்டிநாடு பகுதியை சார்ந்தவர்கள் . பொதுவாக 5 சென்ட் வைரங்களை சென்னை, பெங்களூர், கோயம்புத்தூர் போன்ற பல்வேறு பகுதி மக்கள் வாங்குகின்றனர் .ஆனால் செட்டிநாடு பகுதி மக்கள் குறைந்தபட்ச 25 சென்டுகள் வைரைத்தை அணிய பயன்படுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடதக்கது .